முகப்பு
செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் இங்கிலாந்து

மூன்று தோல்விகளுடன் போட்டியைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு மீண்டும் தகுதி பெற்றுள்ளது

Updated On : 31 மார்ச் 2022, 1:31 pm IST
பகிர்:

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து அணி.

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 2-வது அரையிறுதியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனை டேனி 125 பந்துகளில் 129 ரன்கள் எடுத்து அசத்தினார். சோபியா 60 ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் குவித்துள்ளது. தெ..ஆ.வின் ஷப்னிம் இஸ்மாயில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி இன்று மோசமாக விளையாடியது. ஒருவராலும் 30 ரன்களுக்கு மேல் எடுக்க முடியாத அளவுக்கு இங்கிலாந்து அணி அபாரமாகப் பந்துவீசியது. கடைசியில் தெ.ஆ. அணி 38 ஓவர்களில் 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டு பிரீஸ் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்தின் 22 வயது சோபி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 137 ரன்கள் வித்தியாசத்தில் அரையிறுதியை வென்ற இங்கிலாந்து அணி இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. மூன்று தோல்விகளுடன் போட்டியைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு மீண்டும் தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பைப் போட்டியில் 6-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது.

Advertisement

Advertisement

ஏப்ரல் 3 அன்று கிறைஸ்ட்சர்ச்சில் இறுதிச்சுற்று நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments