FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

லெஜண்ட்ஸ் லீக்: கேப்டன்களாக சேவாக், கம்பீர், ஹர்பஜன் சிங், இர்பான் பதான் தேர்வு

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் (எல்எல்சி) அணிகளின் கேப்டன்களாக இந்திய முன்னாள் வீரர்களான...

Updated On : 2 செப்டம்பர் 2022, 2:43 pm IST
பகிர்:

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் (எல்எல்சி) அணிகளின் கேப்டன்களாக இந்திய முன்னாள் வீரர்களான சேவாக், கம்பீர், ஹர்பஜன் சிங், இர்பான் பதான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி முதல்முறையாக இந்தியாவில் இந்த வருடம் நடைபெறுகிறது. செப்டம்பர் 16 அன்று தொடங்கி அக்டோபர் 8-ல் நிறைவுபெறுகிறது. கொல்கத்தா, லக்னெள, தில்லி, கட்டாக், ஜோத்பூர் ஆகிய நகரங்களில் 16 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் வருட எல்எல்சி போட்டி ஓமனில் நடைபெற்றது. 

குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக சேவாக்கும் இந்தியா கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக கெளதம் கம்பீரும் பில்வாரா கிங்ஸ் அணியின் கேப்டனாக இர்பான் பதானும் மனிபால் டைகர்ஸ் அணியின் கேப்டனாக ஹர்பஜன் சிங்கும் தேர்வாகியுள்ளார்கள். இந்த வருடப் போட்டியை இந்தியாவின் 75-வது சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

செப்டம்பர் 16 அன்று இந்தியா மஹாராஜாஸ் - வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான காட்சி ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தியா மஹாராஜாஸ் அணியின் கேப்டனாக கங்குலியும் வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இயன் மார்கனும் செயல்படவுள்ளார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments