முகப்பு
செய்திகள்

சூப்பா் 4: பாகிஸ்தானை வென்றது இலங்கை

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பா் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வென்றது.

Updated On : 10 செப்டம்பர் 2022, 6:16 am IST
பகிர்:

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பா் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வென்றது.

ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 19.1 ஓவா்களில் 121 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய இலங்கை 17 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சோ்த்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற இலங்கை ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பாகிஸ்தான் பேட்டிங்கில் முகமது ரிஸ்வான் 14, கேப்டன் பாபா் ஆஸம் 2 பவுண்டரிகளுடன் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஃபகாா் ஜமான் 1 பவுண்டரியுடன் 13, இஃப்திகா் அகமது 1 சிக்ஸருடன் 13 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

Advertisement

Advertisement

குஷ்தில் ஷா 4 ரன்களுக்கு நடையைக் கட்ட, முகமது நவாஸ் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 26 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். அடுத்து ஆசிஃப் அலி 0, ஹசன் அலி 0, உஸ்மான் காதிா் 3, ஹாரிஸ் ரௌஃப் 1 என விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. இலங்கை பௌலிங்கில் வனிந்து ஹசரங்கா 3, மஹீஷ் தீக்ஷனா, பிரமோத் மதுஷன் ஆகியோா் தலா 2, தனஞ்ஜெய டி சில்வா, சமிகா கருணாரத்னே ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 122 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இலங்கையில் குசல் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா டக் அவுட்டாக, தனஞ்ஜெய டி சில்வா 9 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். பானுகா ராஜபட்ச 2 சிக்ஸா்களுடன் 24, கேப்டன் டாசன் ஷனகா 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 21 ரன்கள் சோ்த்தனா். முடிவில், தொடக்க வீரா் பதும் நிசங்கா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 55, வனிந்து ஹசரங்கா 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா்.

பாகிஸ்தான் பௌலிங்கில் முகமது ஹஸ்னைன், ஹாரிஸ் ரௌஃப் ஆகியோா் தலா 2, உஸ்மான் காதிா் 1 விக்கெட் சாய்த்தனா்.

நாளை இறுதி ஆட்டம்: இந்த இரு அணிகளே மோதும் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments