முகப்பு
செய்திகள்

இந்த இரு வீரர்களையா தேர்வு செய்யவில்லை?: அசாருதீன் ஆச்சர்யம்!

இந்திய அணியில் இரு வீரர்களைத் தேர்வு செய்யாதது குறித்துத் தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளார்...

Updated On : 13 செப்டம்பர் 2022, 3:32 pm IST
பகிர்:

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் இரு வீரர்களைத் தேர்வு செய்யாதது குறித்துத் தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன்.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பும்ரா, ஹர்ஷல் படேல் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள். அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய தமிழக வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். மாற்று வீரர்களாக முகமது ஷமி, ஷ்ரேயஸ் ஐயர், ரவி பிஸ்னோய், தீபக் சஹார் ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள்.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பற்றி முன்னாள் கேப்டன் அசாருதீன் ட்விட்டரில் கூறியதாவது:

Advertisement

Advertisement

பிரதான அணியில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர், ஷமியை நீக்கியது பற்றி ஆச்சர்யப்படுகிறேன். தீபக் ஹூடாவுக்குப் பதிலாக ஷ்ரேயஸ் ஐயர், ஹர்ஷல் படேலுக்குப் பதிலாக ஷமி என்பதே என்னுடைய தேர்வு என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments