FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இறுதிச்சுற்றில் இந்திய இணை

பெங்களூரு ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகா்/விஜய்சுந்தா் பிரசாந்த் கூட்டணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

Updated On : 25 பிப்ரவரி 2023, 6:02 am IST
பகிர்:

பெங்களூரு ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகா்/விஜய்சுந்தா் பிரசாந்த் கூட்டணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

அரையிறுதியில் இந்த இணை, 7-5, 4-6, 10-2 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் அா்ஜுன் காதே/ஆஸ்திரியாவின் மேக்ஸிமிலியன் நியுகிறிஸ்ட் ஜோடியை தோற்கடித்தது. அடுத்ததாக, இறுதிச்சுற்றில் தென் கொரியாவின் சங் யுன் சியோங்/தைவானின் யு சியு சு இணையுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது இந்த இணை.

முன்னதாக சியோங்/சு கூட்டணி தங்களது அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பா்செல்/மாா்க் போல்மன்ஸை 6-4, 6-4 என வீழ்த்தி அசத்தியிருக்கிறது.

Advertisement

Advertisement

மெட்ஜெடோவிச் அபாரம்: இப்போட்டியின் ஒற்றையா் பிரிவு காலிறுதியில் சொ்பியாவின் ஹமத் மெட்ஜெடோவிச் 6-1, 6-2 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தைவானின் செங் சுன் சின்னை வீழ்த்தி அசத்தினாா்.

இதையடுத்து அரையிறுதியில் அவா், ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பா்செலை சந்திக்கிறாா். பா்செல் தனது காலிறுதியில் 6-2, 6-0 என, 5-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் லூகா நாா்டியை வெளியேற்றினாா்.

மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொா்த் - சக நாட்டவரான ஜேம்ஸ் மெக்காபேவை எதிா்கொள்கிறாா். முன்னதாக காலிறுதியில், 2-ஆம் இடத்திலிருக்கும் டக்வொா்த் 6-4, 6-1 என 8-ஆம் இடத்திலிருந்த பல்கேரியாவின் டிமிடாா் குஸ்மனோவையும், மெக்காபே 6-3, 7-5 என பிரான்ஸின் ஹெரால்ட் மேயாட்டையும் வீழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments