FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஹர்திக் பாண்டியா என்னை விட சிறப்பாக விளையாடுகிறார்: வெங்கடேஷ் ஐயர்

ஹர்திக் பாண்டியா தன்னைவிட சிறப்பாக விளையாடி வருவதால் இந்திய அணியில் இடம்பிடிக்க கடினமாக உழைக்க வேண்டுமென வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார்.

Updated On : 1 ஜூலை 2023, 12:14 pm IST
பகிர்:

இந்திய ஒருநாள் அணிக்கு சிறந்த ஆல்ரவுண்டர் தேவைப்படுகிறது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு ஜடேஜாவுக்கு அடுத்து ஹார்திக் பாண்டியாதான் எல்லோரது தேர்வும்.

2018இல் ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டது. பின்னர் 2022இல் காயம் குணமாகி விளையாட வந்தார். ஐபிஎல் போட்டியில் புதிய அணியான குஜராத் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்றார். 2023 ஐபில் போட்டியில் இறுதிப் போட்டி வரை சென்று சிஎஸ்கே அணியிடம் தோற்றார்.

இதற்கிடையில் வெங்கடேஷ் ஐயர் சிறந்த ஆல்ரவுண்டராக ஐபிஎல் போட்டிகளில் மிளிர ஆரம்பித்தார். தற்போது மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ள ஹர்திக் பாண்டியா ஒருநாள் உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை போட்டிகளில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வெங்கடேஷ் ஐயர் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது:

ஹர்திக் பாண்டியா நல்ல திறமைசாலி. நான் இந்திய அணியில் இடம் பிடிக்க அவரைப் போல் சிறப்பாக விளையாட வேண்டும். இப்போது அவருக்கு அருகில் நான் இல்லை என்பதுதான் நேர்மையான உண்மை. ஆனால் நான் கடினமாக உழைத்து வருகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments