தந்தை, மகன் விக்கெட்டினை எடுத்து அஸ்வின் புதிய சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை, மகன் இருவரையும் விக்கெட் எடுத்து அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் இந்திய அணிக்காக 92வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். டெஸ்டில் 474 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஐசிசி டெஸ்ட் பௌலர் தரவரிசையில் முதலிடத்திலும் ஆல்ரவுண்டர் பட்டியலில் 2வது இடத்திலும் இருக்கிறார்.
இந்திய அணி தற்போது மே.இ.தீவுகள் சுற்றுப்பயணம் செய்து முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி பேட்டிங் செய்து வருகிறது.
தற்போது, டேகனரின் சந்திரபால் விக்கெட்டினை அஸ்வின் எடுத்துள்ளார். இவரது அப்பாவான ஷிவ்நரைன் சந்திரபால் விக்கெட்டினையும் 2011இல் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை, மகன் விக்கெட்டினை எடுத்து அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.