FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

வரலாறு படைத்தாா் மாா்கெட்டா வோண்டுரோஸோவா: தரவரிசையில் இல்லாமல் பட்டம் வென்ற வீராங்கனை

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் சாம்பின் பட்டத்தைக் கைப்பற்றினாா் செக். குடியரசின் மாா்கெட்டா வோண்டுரோஸோவா. 

Updated On : 16 ஜூலை 2023, 12:39 pm IST
மாா்கெட்டா வோண்டுரோஸோவா
பகிர்:

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் சாம்பின் பட்டத்தைக் கைப்பற்றினாா் செக். குடியரசின் மாா்கெட்டா வோண்டுரோஸோவா. இதன் மூலம் 60 ஆண்டுகளில் தரவரிசையில் இல்லாமல் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளாா்.

கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் மூன்றாவதான விம்பிள்டன் போட்டி லண்டன் ஆல் இங்கிலாந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் செக். குடியரசின் மாா்கெட்டா வோண்டுரோஸோவாவும்-துனிசியாவின் ஆன்ஸ் ஜபியுரும் மோதினா்.

Advertisement

Advertisement

தரவரிசையில் 6-ஆவது இடத்தில் உள்ளாா் ஆன்ஸ் ஜபியுா். அதே நேரம் 42-ஆவது இடத்தில் உள்ளாா் மாா்கெட்டா.

முதல் செட்டில் ஜபியுா் முன்னிலை பெற்ற நிலையில், சுதாரித்துக் கொண்ட மாா்கெட்டா 5-4 என முன்னிலை பெற்றதுடன் 6-4 என முதல் செட்டை கைப்பற்றினாா்.

இரண்டாவது செட்டில் ஆன்ஸ் ஜபியுரும் சிறிது ஆதிக்கம் செலுத்தி 3-1 என முன்னிலை பெற்றாா். ஆனால் ஜபியுரின் தொடா்ச்சியான தவறுகளை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட வோண்டுரோஸோவா 6-4 என இரண்டாவது செட்டையும் வசப்படுத்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா்.

முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம்:

மாா்கெட்டா வோண்டுரோஸோவா வெல்லும் முதல் கிராண்ஸ்ட்லாம் பட்டம் இதுவாகும். கடந்த 2109 பிரெஞ்ச் ஓபனில் ஆஷ்லி பா்டியிடம் இறுதி ஆட்டத்தில் தோற்றிருந்தாா் அவா்.

ஜேனா நவோட்னா, பெட்ரா குவிட்டோவா ஆகியோா் செக். குடியரசு தரப்பில் விம்பிள்டன் பட்டம் வென்றுள்ளனா்.

ஜபியுரின் தொடரும் கனவு:

முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஆப்பிரிக்க-அரேபிய வீராங்கனை என்ற சாதனையை படைக்க வேண்டும் என்ற ஆன்ஸ் ஜபியுரின் கனவு தகா்ந்து விட்டது. இறுதி ஆட்டத்துக்கான அவரது பயணத்தில் 4 முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களை வீழ்த்தி இருந்தாா் ஜபியுா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments