FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மெஸ்ஸியை கிண்டல் செய்த எம்பாப்பேவின் பதிவுகளால் சர்ச்சை! என்ன நடந்தது?

பிரபல கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியை கிண்டல் செய்து கிளியன் எம்பாப்பேவின் பதிவுகளால் சர்ச்சையானது.

Updated On : 29 ஆகஸ்ட் 2024, 2:42 pm IST
மெஸ்ஸியை கிண்டல் செய்த எம்பாப்பேவின் பதிவுகளால் சர்ச்சை. - படங்கள்: எக்ஸ் / கிளியன் எம்பாப்பே.
பகிர்:

பிரபல கால்பந்தாட்ட வீரர் கிளியன் எம்பாப்பேவின் எக்ஸ் கணக்கில் ஹேக் செய்யப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

பிரான்ஸை சேர்ந்த 25 வயதான கால்பந்தாட்ட வீரர் கிளியன் எம்பாப்பே இதுவரை 331 கோல்களை அடித்துள்ளார். 158 கோல்கள் அடிக்கவும் உதவியுள்ளார்.

எம்பாபே தான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகர் என பலமுறை கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

எம்பாப்வேயின் எக்ஸ் கணக்கில் மெஸ்ஸியை குறித்து கிண்டல் செய்தும் ரொனால்டோவை புகழ்ந்தும் பதிவுகள் வந்தன. மான்செஸ்டர் சிட்டியை கிண்டல் செய்தும் பதிவுகள் வந்தன. இதனால் மெஸ்ஸி ரசிகர்கள் மிகுந்த வருத்தமடைந்தனர்.

பின்னர்தான் கிளியன் எம்பாப்பேவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது எனத் தெரியவந்தது. பின்னர் அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டன.

ஹேக் செய்யப்பட்ட பிறகு மெஸ்ஸியை கிண்டல் செய்தும் கிறிஸ்டியானோ ரொனால்டோவை புகழ்ந்தும் பதிவிட்ட பதிவுகளால் காலபந்தாட்ட ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் சண்டைகளும் வாக்குவாதங்களும் எழுந்தன.

பிஎஸ்ஜி அணியிலிருந்து சமீபத்தில்தான் ரியல் மாட்ரிட் அணிக்கு எம்பாப்பே மாறினார். நேற்று (ஆக.28) யுஇஎஃப்ஏ சாம்பியன் லீக் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.

36 கிளப் அணிகள் மோதும் இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும் 8 போட்டிகள் விளையாடவிருக்கின்றன. இதில் 16 அணிகள் தேர்வுசெய்யப்பட்டு அதற்கு இடையேயான பிளே ஆப் ஆட்டங்கள் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments