FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

உலக செஸ் தரவரிசை: 3-ம் இடத்துக்கு முன்னேறிய குகேஷ்!

உலக செஸ் தரவரிசையில் தமிழக வீரர் குகேஷ் மூன்றாம் இடத்துக்கு முன்னேறினார்.

Updated On : 1 மார்ச் 2025, 6:29 pm IST
குகேஷ்
பகிர்:

உலக செஸ் தரவரிசையில் தமிழக வீரர் குகேஷ் முதல்முறையாக மூன்றாம் இடத்துக்கு முன்னேறினார். பிரக்யானந்தா 8-வது இடத்தில் உள்ளார்.

உலக செஸ் தரவரிசைப் பட்டியலை ஃபிடே அமைப்பு இன்று வெளியிட்டது. கிளாசிக் போட்டிகளுக்கான இந்தத் தரவரிசைப் பட்டியலில் நடப்பு உலக செஸ் சாம்பியனான குகேஷ் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இவருடன் தெலங்கானாவைச் சேர்ந்த அர்ஜுன் எரிகைசி 5-வது இடத்தில் உள்ளார். மற்றொரு தமிழக செஸ் வீரரான பிரக்யானந்தா மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து 8-வது இடம்பிடித்துள்ளார்.

Advertisement

Advertisement

உலக செஸ் தரவரிசையில் முதல் 10 இடங்களில் 3 இந்தியர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இந்தியா செஸ் விளையாட்டில் மீண்டும் தனது பலத்தை நிரூபித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனைத் தோற்கடித்து குகேஷ் வெற்றிபெற்றார்.

இதன்மூலம் 18 வயதேயான குகேஷ் உலக தரவரிசையில் 10 புள்ளிகள் அதிகம்பெற்று 2787 புள்ளிகளுடன் தனக்கு முன்னிருந்த இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, அமெரிக்காவின் ஃபேபியானோ கரானாவை முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக தரவரிசையில் மேக்னஸ் கார்ல்சன் 2833 புள்ளிகளுடன் வழக்கம்போல முதலிடத்தில் நீடித்து வருகிறார். இரண்டாமிடத்தில் 2802 புள்ளிகளுடன் ஹிகாரு நகாமுரா இடம்பெற்றுள்ளார்.

பெண்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் கோனேரு ஹம்பி 2538 புள்ளிகளுடன் 6-ம் இடத்தில் உள்ளார். தமிழக வீரரான வைஷாலி 2484 புள்ளிகளுடன் 14-வது இடத்திலும், ஹரிகா துரோணவள்ளி 2483 புள்ளிகளுடன் 16-வது இடத்திலும் உள்ளனர்.

இதில், சீனாவின் ஹோ யுஃபான் 2633 புள்ளிகளுடன் வழக்கம்போல முதலிடத்தில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments