முகப்பு
செய்திகள்

ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!

ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது... - பிடிஐ
பகிர்:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் அகமதாபாதில் இன்று (மே 31) நடைபெற்றது. இந்தப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் 13 பந்துகளுக்கு 15 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும், வெங்கடேஷ் ஐயர் 32 ரன்களும், டிம் டேவிட் 24 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இருப்பினும், பெங்களூரு அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி 42 பந்துகளுக்கு 75 ரன்களை குவித்து அணிக்கு பலம் சேர்த்து அசத்தினார்.

இந்த நிலையில், 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 161 ரன்களை குவித்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

முன்னதாக, 18 ஆண்டுகளில் முதல்முறையாக, கடந்த 2025 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

summary

IPL finals, RCB defeated the Gujarat Titans to win the championship title for the second time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.