முகப்பு
தமிழ்நாடு

"அறிவியல் ஒளி' இதழ் ஆசிரியருக்கு தேசிய அறிவியல் விருது

சென்னை, பிப்.22: "அறிவியல் ஒளி' இதழ் ஆசிரியர் நா.சு.சிதம்பரத்துக்கு (66) தேசிய அறிவியல் விருது (2011) வழங்கப்பட்டுள்ளது.  புத்தகங்கள், இதழ்கள் வழியே அறிவியலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் முதன்ம

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:18 PM
பகிர்:

சென்னை, பிப்.22: "அறிவியல் ஒளி' இதழ் ஆசிரியர் நா.சு.சிதம்பரத்துக்கு (66) தேசிய அறிவியல் விருது (2011) வழங்கப்பட்டுள்ளது.

 புத்தகங்கள், இதழ்கள் வழியே அறிவியலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் முதன்மையாக இருந்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ.1 லட்சமும், நினைவுப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.

 தேசிய அறிவியல் தினமான பிப்ரவரி 28-ல் புதுதில்லியில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படும். இதற்கு முன்னதாக, குன்றக்குடி அடிகள், எழுத்தாளர் சுஜாதா, நெல்லை சு.முத்து போன்றோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவர், "அறிவுச்சுடர்' என்ற பள்ளிகளுக்கான மாதமிருமுறை இதழை 19 ஆண்டுகள் நடத்தியுள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments