"அறிவியல் ஒளி' இதழ் ஆசிரியருக்கு தேசிய அறிவியல் விருது
சென்னை, பிப்.22: "அறிவியல் ஒளி' இதழ் ஆசிரியர் நா.சு.சிதம்பரத்துக்கு (66) தேசிய அறிவியல் விருது (2011) வழங்கப்பட்டுள்ளது. புத்தகங்கள், இதழ்கள் வழியே அறிவியலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் முதன்ம
சென்னை, பிப்.22: "அறிவியல் ஒளி' இதழ் ஆசிரியர் நா.சு.சிதம்பரத்துக்கு (66) தேசிய அறிவியல் விருது (2011) வழங்கப்பட்டுள்ளது.
புத்தகங்கள், இதழ்கள் வழியே அறிவியலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் முதன்மையாக இருந்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ.1 லட்சமும், நினைவுப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.
தேசிய அறிவியல் தினமான பிப்ரவரி 28-ல் புதுதில்லியில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படும். இதற்கு முன்னதாக, குன்றக்குடி அடிகள், எழுத்தாளர் சுஜாதா, நெல்லை சு.முத்து போன்றோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவர், "அறிவுச்சுடர்' என்ற பள்ளிகளுக்கான மாதமிருமுறை இதழை 19 ஆண்டுகள் நடத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.