வெள்ள நிவாரணம் கோரி போராட்டம்
வடகிழக்குப் பருவமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் பகுதி மக்கள் நிவாரணம் கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
வடகிழக்குப் பருவமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் பகுதி மக்கள் நிவாரணம் கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ. 5,000 நிவாரணத் தொகையாக வழங்கி வருகிறது.
இத்தொகை திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வசிப்போருக்குக் கிடைக்கவில்லை.
இதனால் ஆங்காங்கே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்துகின்றனர்.
இந்நிலையில் அம்பத்தூர் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் வெள்ள நிவாரணத் தொகை கோரி, மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். வட்டாட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.