சூலூர் விமானப்படைத் தளத்தில் மர்ம நபர் புகுந்ததால் பரபரப்பு
சூலூர் விமானப்படைத் தளத்தில் மர்ம நபர் புகுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சூலூர் விமானப்படைத் தளத்தில் மர்ம நபர் புகுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை சூழூர் விமானப்படைத் தளத்தில் புகுந்த மர்ம நபரை விமானப்படை போலீசார் பிடித்து சூலூர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். பிடிப்பட்ட நபரிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரனாக பேசுவதாகவும், தான் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், பெயர் சீனிவாசலு என்றும் கூறியுள்ளார்.
இவர் மனநிலை சரியில்லாதவரா என்று பரிசோதிக்க கோவை நீதிமன்றத்தில் அனுமதி வாங்க இவரை கொண்டு சென்றுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களில் விமானப்படை தளத்தில் பிடிப்பட்ட நபர்களில் இவர் நான்காவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.