தமிழ்நாடு

தில்லி தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு அதிமுக மாநிலங்களவை எம்.பி. மைத்ரேயன் தர்ணா!

தனது காரை உள்ளே விட மறுத்ததால், தில்லி தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு அதிமுக ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

DIN

புதுதில்லி: தனது காரை உள்ளே விட மறுத்ததால், தில்லி தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு அதிமுக ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

அதிமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் மைத்ரேயன். முன்பு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக விளங்கியவர். தற்பொழுது கட்சியின் பிளவிற்கு பின்னர் அவர் பன்னீர்செல்வம் அணியில் இருந்து வருகிறார்.

அதிமுக அணிகள் பிளவுக்கு பின்னர், கட்சியின் பெயர் மற்றும் சின்னம் முடக்கப்பட்டுள்ள நிலையில், இரு அணிகளுமே தங்களுக்கு சாதகமாக ஆவணங்களை தொடர்ச்சியாக தில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு மைத்ரேயன் தனது காரில் வந்துள்ளார். ஆனால் அவரின் காரை உள்ளே அனுமதிக்க, அங்கிருந்த காவலர்கள் மறுத்து  விட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த மைத்ரேயன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் தேர்தல் ஆணைய அலுவலகத்தின் எதிரே நாற்காலி ஒன்றில் அமர்ந்து அவர் தற்பொழுதுதர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மமதா மீது சிபிஐ வழக்குப் பதிய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!

குளிர் அலை: அதிகாலையில் நடைப்பயிற்சி வேண்டாமே! செய்யக்கூடாதவை..

புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 பொங்கல் பரிசு! ஆனால்...

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிறைவு!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

SCROLL FOR NEXT