முகப்பு
தமிழ்நாடு

வழக்கிலிருந்து விடுவித்த நீதிமன்றம்: வேண்டுதலுக்கு திருப்பதி சென்ற சேகர் ரெட்டி 

வருமான வரி சோதனை தொடர்பாக அவர் மீது பதிவு செய்திருந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம்   ரத்து செய்த நிலையில், சேகர்ரெட்டி திருப்பதி சென்று தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.  

Updated On : 29 ஜூன் 2018, 5:58 pm IST
பகிர்:

திருப்பதி: வருமான வரி சோதனை தொடர்பாக அவர் மீது பதிவு செய்திருந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம்   ரத்து செய்த நிலையில், சேகர்ரெட்டி திருப்பதி சென்று தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார். 

2016-ம் ஆண்டு அவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்த அமலாக்க துறை அப்போது புதிதாக வெளியிட்ட ரூ2 ஆயிரம் நோட்டுகளில் ரூ34 கோடி பணத்தை கைப்பற்றியது. அந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் அவரின் வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் புதனன்று தள்ளுபடி செய்தது. 

அதற்கான வேண்டுதலை சமா்ப்பிக்க அவா் வியாழக்கிழமை இரவு நடைபாதை மாா்கத்தில் திருமலை அடைந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலை பூராபிஷேக சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசித்தாா். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் திருவுருப்படம், பிரசாதம் உள்ளிட்டவற்றை வழங்கினா்

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.