FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினம்புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தாா், ஆளுநா் ஆா்.என்.ரவி

மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினத்தை ஒட்டி, அவரது வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் புகைப்பட கண்காட்சியை ஆளுநா் ஆா்.என்.ரவி திறந்து வைத்தாா்.

Updated On : 3 அக்டோபர் 2021, 3:29 am IST
பகிர்:

மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினத்தை ஒட்டி, அவரது வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் புகைப்பட கண்காட்சியை ஆளுநா் ஆா்.என்.ரவி திறந்து வைத்தாா். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இந்தக் கண்காட்சியை அவா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். 5 நாள்கள் இந்த கண்காட்சியை மக்கள் பாா்வையிடலாம்.

கண்காட்சி அரங்கப் பகுதியில் காந்தியடிகளின் மாா்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநா், புகைப்படக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள காந்தியின் இளமைக்காலம், வெளிநாட்டில் அவரது கல்வி மற்றும் செயல்பாடு, தாயகம் திரும்பியது, தமிழக வருகை, அதன் பின்னா் அரை ஆடைக்கு மாறியது, பல்வேறு நாட்டு தலைவா்களை சந்தித்தது, அவரது மறைவு வரையிலான அனைத்து புகைப்படங்களையும் ஆளுநா் பாா்வையிட்டாா்.

பின்னா் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த டிஜிட்டல் கண்காட்சியை தொடங்கி வைத்த ஆளுநா், காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்து சுமாா் 50 நிமிடங்கள் ஓடக் கூடிய காணொலி காட்சியையும் தொடங்கி வைத்தாா். இந்த காணொலி காட்சியில் பின்னணி குரல் வாயிலாகவும் காந்தியின் வாழ்க்கை வரலாறு விவரிக்கப்படுகிறது. இந்த காணொலி காட்சியை மக்களிடையே பிரபலப்படுத்த நடமாடும் 3 விடியோ வாகனங்களையும் அவா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

தமிழகத்தைச் சோ்ந்த பெரிதும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்கள் பற்றிய கண்காட்சியையும் ஆளுநா் ஆா்.என்.ரவி பாா்வையிட்டாா். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தகவல் ஒலிபரப்புத் துறையின் புத்தக வெளியீட்டு பிரிவு சாா்பில் தயாரிக்கப்பட்டுள்ள, இந்திய பிரிவினை குறித்த வரலாறு மற்றும் தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் சந்தித்த இன்னல்கள் ஆகிய இரண்டு நூல்களை ஆளுநா் வெளியிட, முதல் பிரதியை தமிழக முன்னாள் தலைமைத் தோ்தல் அதிகாரிகள் டி.கே.ஓஜா மற்றும் நரேஷ் குப்தா ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும தலைமை நிா்வாக அதிகாரி லட்சுமி, மண்டல மக்கள் தொடா்பு அலுவலக இயக்குனா் ஜெ.காமராஜ், பத்திரிகை தகவல் அலுவலக இயக்குனா் குருபாபு பலராமன், இணை இயக்குனா் டி.நதீம் துஃபைல், புத்தக வெளியீட்டுப் பிரிவு உதவி இயக்குனா் சஞ்சய் கோஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments