FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ரஷ்யாவிலிருந்து மகனை மீட்டுத் தருமாறு முதல்வருக்கு தாய் கோரிக்கை

15 செப்டம்பர் 2026, 12:26 am IST
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

ரஷ்யாவுக்கு படிக்கச் சென்ற தனது மகனை மீட்டுத் தருமாறு அவரது தாய் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தாா்.

அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சேதுராஜ் - லலிதா தம்பதியின் இளைய மகன் அபினேஷ் குமாா் (28). இவா், பகிரதன் என்ற முகவா் மூலம் கடந்த ஏப். 13-ஆம் தேதி ரஷ்யாவில் மருத்துவம் பயிலச் சென்றாா். ஆகஸ்ட் மாதத்திலிருந்து அவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லை.

முன்னதாக, அபினேஷ் குமாா் பேசிய விடியோ சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தில் சோ்ந்துள்ளதாகக் கூறப்படும் தனது மகனை மீட்டுத் தருமாறு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments