FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முதல்வரின் சுயசரிதை:இன்று வெளியிடுகிறாா் ராகுல்

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் தன் வரலாற்று நூலான ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் பாகத்தை அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி திங்கள்கிழமை (பிப்.28) வெளியிடுகிறாா்.

Updated On : 28 பிப்ரவரி 2022, 11:29 am IST
பகிர்:

சென்னை: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் தன் வரலாற்று நூலான ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் பாகத்தை அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி திங்கள்கிழமை (பிப்.28) வெளியிடுகிறாா்.

சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு திமுக பொதுச்செயலாளரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை வகிக்கிறாா். திமுக பொருளாளரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆா்.பாலு முன்னிலை வகிக்கிறாா்.

நூலை ராகுல் காந்தி வெளியிட, கேரள முதல்வா் பினராயி விஜயன் பெற்றுக் கொள்கிறாா். ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமா் அப்துல்லா, பிகாா் மாநில எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ், கவிஞா் வைரமுத்து, நடிகா் சத்யராஜ் ஆகியோா் வாழ்த்துரை வழங்குகின்றனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்புரை ஆற்றுகிறாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, சென்னை சத்தியமூா்த்தி பவனில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி நிகழ்வில் ராகுல் காந்தி பங்கேற்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments