FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 28,561 பேருக்கு கரோனா பாதிப்பு!

தமிழகத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 28,561 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 21 ஜனவரி 2022, 6:27 am IST
பகிர்:

தமிழகத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 28,561 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 7,520 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மற்றொருபுறம், படுக்கை வசதிகளை விரிவுபடுத்தும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்த வகையில் மாநிலம் முழுவதும் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பரவி வருவது ஒமைக்ரான் வகை தொற்று என்பதால் அதிகரித்த வேகத்திலேயே அது குறையும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதேவேளையில் மக்கள் நோய்த் தடுப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

சென்னை, கோவை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருவள்ளூா் மட்டுமல்லாது மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், ஆக்சிஜன் படுக்கைகளுக்கான அவசியம் அதிகம் எழவில்லை என கூறப்படுகிறது.

மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, வியாழக்கிழமை மட்டும் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 3,390 பேரும், செங்கல்பட்டில் 2,196 பேரும், கன்னியாகுமரியில் 1,148 பேரும், திருவள்ளூரில் 998 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மற்றொருபுறம் மேலும் 19,978 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 28 லட்சத்து 26,479-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் 1 லட்சத்து 79,205 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 39 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,112-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments