'விலைவாசியை கட்டுக்குள் வைத்துள்ளது தமிழ்நாடு'
தமிழகத்தில் விலைவாசி கட்டுக்குள் இருப்பதாக மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விலைவாசி கட்டுக்குள் இருப்பதாக மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது:
இந்திய அளவில் உணவுப் பொருள்களின் விலையேற்றம் 7.6%-ஆக உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் உணவுப் பொருள் விலையேற்றம் 5%-க்கு குறைவாகவே உள்ளது.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் இருக்கும் வலுவான பொதுவிநியோக முறையால் விலையேற்றம் குறைவாக உள்ளது. பொதுவிநியோகத் திட்டத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
வெளிச்சந்தையில் எண்ணெய் விலை ஏறினாலும் பொதுவிநியோக திட்டத்தின் மூலம் குறைந்த விலையில் அரசு வழங்குகிறது. பொதுவிநியோக திட்டம் தற்போது சீராக செயல்படுவதால் தமிழ்நாட்டின் சில்லறை பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அதிவேக பயணம்: சிக்கலில் மாட்டிக்கொண்ட யூடியூபர்
பொதுவிநியோக திட்டத்தில் வழங்கும் பொருட்களுக்கு ரூ.5000 கோடி தமிழக அரசு செலவு செய்கிறது. ரேசன் கடைகளில் அரிசிக்கு ரூ.2205 கோடியும், துவரம் பருப்புக்கு ரூ.1500 கோடியும் தமிழ்நாடு அரசு வழங்குகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.