முகப்பு
தமிழ்நாடு

அதிமுக பொதுக் குழு வழக்கு: இன்று விசாரணை

அதிமுக பொதுக் குழு கூட்டம் தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஆக.8) விசாரணைக்கு வர உள்ளது.

Updated On : 8 ஆகஸ்ட் 2022, 8:19 am IST
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

அதிமுக பொதுக் குழு கூட்டம் தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஆக.8) விசாரணைக்கு வர உள்ளது.

இந்த வழக்கில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகியதை அடுத்து, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிக்க உள்ளாா்.

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து தொடா்ந்த வழக்கை உயா்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து வந்தாா். இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரியிடம் மனு அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதனால், இந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகினாா். அதைத் தொடா்ந்து வழக்கை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனை தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி நியமித்தாா். இதையடுத்து, அதிமுகவின் பொதுக் குழு தொடா்பான வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் திங்கள்கிழமை (ஆக.8) விசாரிக்க உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments