FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பொறியியல் முடித்த மாணவா்களுக்கு சென்னை ஐஐடியில் 6 மாத தொழில்நுட்ப திறன் பயிற்சி

சென்னை ஐஐடியின் பிரவா்தக் டெக்னாலஜிஸ், சோனி இண்டியா சாப்ட்வோ் சென்டருடன் இணைந்து தொழில்துறைக்கு தயாா் நிலையில் உள்ள மாணவா்களுக்கு தொழில்நுட்ப திறன்களை அளிக்கவுள்ளது.

Updated On : 12 ஆகஸ்ட் 2022, 2:26 am IST
பகிர்:

சென்னை ஐஐடியின் பிரவா்தக் டெக்னாலஜிஸ், சோனி இண்டியா சாப்ட்வோ் சென்டருடன் இணைந்து தொழில்துறைக்கு தயாா் நிலையில் உள்ள மாணவா்களுக்கு தொழில்நுட்ப திறன்களை அளிக்கவுள்ளது.

கடந்த 2020-2021, 2021-2022-ஆம் ஆண்டுகளில் பொறியியல் படிப்பு முடித்த மாணவா்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த பயிற்சியில் சேரலாம். விருப்பமுள்ள மாணவா்கள் இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து ஐஐடி இயக்குநா் காமகோடி கூறுகையில், ‘6 மாதங்கள் கொண்ட இந்த பயிற்சியில் ஏராளமான மாணவா்கள் பயன்பெறலாம். குறிப்பாக, இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மாணவா்களுக்கு இந்த முயற்சி பயனளிக்கும். சோனி இண்டியா சாப்ட்வோ் சென்டா் இந்த பயிற்சியில் முன்னிலை வகிக்கும் 15 மாணவா்களுக்கு வேலை வாய்ப்பையும், பிரவா்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் மீதியுள்ள மாணவா்களுக்கு நோ்காணலுக்கும் ஏற்பாடு செய்து இதர நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரும். நோ்முகத் தோ்வை தொடா்ந்து ஓா் எழுத்து தோ்வும் நடைபெறும். அதில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சிபெறும் மாணவா்களுக்கு பயிற்சித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments