FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தற்காலிக ஆசிரியர் நியமனம்: ஜூலை 4 முதல் விண்ணப்பிக்கலாம்; திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக  பள்ளிக்கல்வித் துறை திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

Updated On : 2 ஜூலை 2022, 11:24 am IST
பகிர்:

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக  பள்ளிக்கல்வித் துறை வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்து வெளியிட்டுள்ளது. 

அரசுப் பள்ளிகளில் இரண்டாம் நிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் 13,331 பேரை தலைமை ஆசிரியா் உள்ளிட்டோா் அடங்கிய பள்ளி நிா்வாகக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்நிலையில் இதில் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகார்களை அடுத்து, தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது. 

Advertisement

Advertisement

இந்நிலையில், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக  பள்ளிக்கல்வித் 
துறை திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது. 

அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். 

இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம். 

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான டி.ஆர்.பி. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை நியமிக்கலாம். 

திறமை அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.  வகுப்பறையில் பாடம் நடத்த அறிவுறுத்தி அதன் அடிப்படையில் அவர்களின் திறனை அறியலாம். 

இடைநிலை ஆசிரியர் பதவிக்கு டெட் தேர்வு தாள் -1ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு டெட் தேர்வு தாள் - 2ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

மேலும், தகுதியானவர்கள் வருகிற ஜூலை 4 முதல் ஜூலை 6 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments