FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நீட் விலக்கு: ’மோடி, அமித் ஷாவிடம் அழுத்தமாக வலியுறுத்தினேன்’

நீட் விலக்கு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அழுத்தமாக வலியுறுத்தினேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Updated On : 31 மார்ச் 2022, 7:12 pm IST
மு.க.ஸ்டாலின்
பகிர்:

நீட் விலக்கு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அழுத்தமாக வலியுறுத்தியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, ''பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் உடனான சந்திப்பு மனநிறைவுடையதாக அமைந்தது.

பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களிடம் வைத்துள்ளேன். இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். 

Advertisement

Advertisement

மீனவர்களின் மீன்பிடி உரிமை, கட்சத்தீவு மீட்பது குறித்து கோரிக்கை வைத்துள்ளேன். 

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் பயில்வது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தேன். 

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கட்ட அனுமதி அளிக்கக்கூடாது. ஜிஎஸ்டி இழப்பை தொடர்ந்து வழங்கிட வேண்டும். 

நரிக்குறவர்களை பட்டியலின, பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வைத்தேன். 

உள்துறை அமைச்சரிடம் நீட் பிரச்னை குறித்து அழுத்தமாக பதிவு செய்தேன். நீட் விலக்கு குறித்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தோம். ஆனால் அவர் இன்னும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தாமதித்து வருவது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிசாலையாக்கவும், சென்னை முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட பாலம் அமைக்கவும், நிலுவையிலுள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும் அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments