1981-ல் எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்த பிரபலம்: யார் என்று தெரிகிறதா?
பலரும் தங்களது பழைய கால புகைப்படங்களை பகிர்ந்து, அதனுடன் இருக்கும் நினைவலைகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கம்.
பலரும் தங்களது பழைய கால புகைப்படங்களை பகிர்ந்து, அதனுடன் இருக்கும் நினைவலைகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கம்.
பொதுவாகவே நட்சத்திர பிரபலங்கள் தங்களது சிறு வயது அல்லது குழந்தை வயது புகைப்படங்களைத்தான் பகிர்வார்கள். ஆனால் முன்னாள் அமைச்சர் ஒருவர் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதாவது, தமிழக முன்னாள் அமைச்சர் ஒருவர் தான் 1981ஆம் ஆண்டு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து பரபரப்பைக் கூட்டியுள்ளார்.
Advertisement
Advertisement
அவர் யார் என்று இந்தப் புகைப்படத்தைப் பார்த்து கண்டுபிடிக்க முடிகிறதா என்று சற்று முயற்சியுங்கள். நீங்கள் சொன்ன பதில் சரிதானா என்பதைப் பார்க்கலாம்.
இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் என்று கண்டுபிடித்திருந்தார். உங்கள் பதில் சரிதான்..
தமிழக மீன்வளத் துறை முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், 1981ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் -1 கோவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) தேர்வுக்காக விண்ணப்பித்த போது எடுத்த புகைப்படமாம் இது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.