மதுரை மாநாட்டிற்கான இலச்சினை வெளியீடு!
மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கான இலச்சினை வெளியிடப்பட்டது.
சென்னை: மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கான இலச்சினை வெளியிடப்பட்டது.
மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டுக்கான இலச்சினையை சென்னையில் அதிமுக தலைமை அலுவலத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார்.
இதையும் படிக்க | முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பலத்த மழை: ஒரே நாளில் நீர்வரத்து 1,511 கன அடி அதிகரிப்பு
Advertisement
Advertisement
உடன் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், மூத்த நிர்வாகிகள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் இருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.