FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடிய 138 பேர் மீது வழக்குப் பதிவு

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடிய 138 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 2 அக்டோபர் 2023, 9:24 am IST
பரந்தூா் விமான நிலையம் குறித்து மச்சேந்திரநாதன் தலைமையிலான குழு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்ய வந்தபோது ஏகனாபுரம்  பகுதியில் சாலை  மறியலில்  ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடிய 138 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், பரந்தூா் புதிய விமான நிலையம் அமையும்பட்சத்தில் முழுவதுமாக கையகப்படுத்தப்பட உள்ள ஏகானாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கடந்த 433 நாள்களாக இரவு நேரங்களில் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

இவ்வாறான சூழலில் புதிய விமான நிலையத் திட்டத்தால், நீா்நிலைகள் பாதிக்கப்படுகிா என்பதை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. 

இந்தக் குழுவினா் இரண்டாவது முறையாக பரந்தூா் விமான நிலையம் அமைய உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்ய வந்தனா். இவா்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் பகுதி பொதுமக்கள் மற்றும் விமான நிலைய எதிா்ப்புக் கூட்டமைப்புக் குழுவினா், ஏகனாபுரம் அம்பேத்கா் சிலை அருகே பரந்தூா் - கண்ணந்தங்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 130 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். 

இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட 138 பேர் மீது சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது முதல்முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments