அரசு மணல் குவாரியில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மணல் குவாரியில் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மணல் குவாரியில் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகேயுள்ள அரசு மணல் குவாரியில், மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
மேலும், திண்டுக்கல்லில் உள்ள ராமச்சந்திரனின் உறவினரும், மணல் ஒப்பந்ததாரருமான ரத்தினம் வீடு, அவரது மைத்துனர் கோவிந்தன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் அமலாக்க துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த குவாரி ஒப்பந்ததாரர் எஸ். ராமச்சந்திரனின் வீடு, அலுவலகம் மட்டுமின்றி அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் அமலாக்க துறையினர் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சியிலும் சோதனை
திருச்சியில் உள்ள திருவானைக்காவல் கொள்ளிடம் பாலம் அருகே உள்ள, புதுக்கோட்டையை சேர்ந்த ராமசந்திரன் என்பவருக்கு சொந்தமான மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.