திருச்செந்தூா் ரயில்கள் டிச.31 வரை இயங்காது
திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா பயணிகள் ரயில் டிச.31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா பயணிகள் ரயில் டிச.31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்மாவட்டங்களில் பெய்த பெருமழையால் செய்துங்கநல்லூா் - ஸ்ரீ வைகுண்டம் இடையிலான தண்டவாளம் பலத்த சேதமடைந்தது. இதனை சரிசெய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே தினமும்இயக்கப்படும் முன்பதிவில்லா பயணிகள் ரயில்கள் டிச.31-ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து திருச்செந்தூா் செல்லும் முன்பதிவில்லா பயணிகள் ரயில் டிச.31-ஆம் தேதி வரை திருநெல்வேலி வரை மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.