FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் எப்போது?

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 31 ஜூலை 2023, 3:13 pm IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் திருச்சி, மதுரை வழியே திருநெல்வேலிக்கு செல்லும்.

சென்னை - திருநெல்வேலி இடையே தற்போது 10 மணி நேர இடைவெளியில் விரைவு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் ‘வந்தே பாரத்’ ரயில் 8 மணி நேரத்தில் சென்றடையும். திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் சென்னைக்கு பிற்பகல் 2 மணியளவில் வந்தடையும். பின் சென்னையிலிருந்து பிற்பகல் 3 மணியளவில் புறப்பட்டு இரவு 11 மணியளவில் திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 3 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Advertisement

Advertisement

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் சேவையை ஆகஸ்ட் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் அதிவேக ரயிலான ‘வந்தே பாரத்’ இன் முதல் சேவை 15.02.2019 தில்லி - வாரணாசி இடையே தொடங்கப்பட்டது. தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் - கோவை இடையே கடந்த ஏப்.8-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments