FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ரூ.2,695 கோடி சுங்கச்சாவடி கட்டணம் வசூல்: நிதின் கட்கரி தகவல்

கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் ரூ.2,695 கோடி சுங்கச்சாவடி கட்டணம் வசூலாகி உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

Updated On : 17 மார்ச் 2023, 10:56 am IST
மக்களவையில் நிதின் கட்கரி
பகிர்:


புதுதில்லி: கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் ரூ.2,695 கோடி சுங்கச்சாவடி கட்டணம் வசூலாகி உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

சுங்கச்சாவடி குறித்து மக்களவையில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சாலை போக்குவத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: 
கடந்த நிதியாண்டில் நாட்டில் உள்ள மொத்த சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 

இதில், அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் ரூ.4,183 கோடியும், குஜராத்தில் ரூ.3.642 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.2,695 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது என தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் 4,934 பேர் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments