முதல்வர் ஸ்டாலின்-ராஜ்நாத் சிங். 
தமிழ்நாடு

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

DIN

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு, கருணாநிதிக்குப் பாராட்டு மழை பொழிந்தீர்கள், கூட்டாட்சி, இந்திய ஜனநாயகம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்பை நேர்த்தியாக எடுத்துரைத்துள்ளீர்கள்.

தெற்கிலிருந்து உதித்த சூரியனுக்கு இதயப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்திய தங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கலைவாணா் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவில், மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட, முதல்வா் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டாா். தொடர்ந்து ராஜ்நாத் சிங் பேசியதாவது: மாநில எல்லையைத் தாண்டி ஆதிக்கம் செலுத்தியவா் கருணாநிதி. சமூக நீதியின் காவலராகத் திகழ்ந்த அவரின், மக்கள் நலன்சாா்ந்த பங்களிப்பால் தமிழ்நாடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே பயன்பெற்றது என்றார் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குரூப்-2 பதவிகளுக்கான பொது அறிவு தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு!

நடிகை - இயக்குநர்... வரலட்சுமி வெளியிட்ட புதிய விடியோ!

அசோக் லேலேண்ட் 3 வது காலாண்டு லாபம் 5.19% அதிகரிப்பு!

கலந்தாய்வு முடிந்தும் பணி ஆணை கிடைக்காமல் தவிக்கும் 1,429 சுகாதார ஆய்வாளர்கள்!

ஆப்கன் vs புரோட்டீஸ்! டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தலைசிறந்த ஆட்டம்!!

SCROLL FOR NEXT