தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்வில் 94.39% தேர்ச்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் 10ஆம் வகுப்புத் தேர்வில் 94.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 10ஆம் வகுப்புத் தேர்வில் 94.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகின. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 309 பள்ளிகளில், 10,534 மாணவர்கள், 11,309 மாணவிகள் என மொத்தம் 21,843 பேர் தேர்வெழுதினர்.
அவர்களில் 9,645 மாணவர்கள், 10,973 மாணவிகள் என மொத்தம் 20,618 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் நிகழாண்டு 94.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Advertisement
Advertisement
கடந்த ஆண்டு 95.58 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். நிகழாண்டு தேர்ச்சி சதவீதம் 1.19-ஆக குறைந்துள்ளது. இதையைடுத்து கடந்த ஆண்டு 5ஆவது இடத்திலிருந்த தூத்துக்குடி மாவட்டம் நிகழாண்டு 9 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.