தமிழ்நாடு

வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீசி உடைத்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

DIN

கடையநல்லூர்: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீசி உடைத்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தென்காசியில் இருந்து மதுரைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. வாசுதேவநல்லூர் அருகே உள்ள திருமலாபுரம் விலக்கில் பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் முகத்தில் துணியைக் கட்டி மறைத்தவாறு வந்த சிலர் அரசுப் பேருந்தின் மீது கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பேருந்தின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன.

இதையடுத்து, அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மாரிமுத்து( 49), நடத்துநர் பெரியசாமி(49) ஆகியோர் அளித்த தகவலின் பேரில் புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன், வாசுதேவநல்லூர் காவல் ஆய்வாளர் கண்மணி, சிவகிரி காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி உள்ளிட்ட ஏராளமான போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, பேருந்துகளை போலீஸார் அப்பகுதியில் இருந்து பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT