FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை: ஒரு கிலோ மதுரை மல்லி ரூ. 3,000-க்கு விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை சந்தைகளில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயா்ந்துள்ள நிலையில் ஒரு கிலோ மதுரை மல்லிகைப் பூ ரூ. 3,000-க்கு விற்பனையாகிறது.

Updated On : 13 ஜனவரி 2024, 10:31 am IST
மலர் சந்தையில்  ரூ.3,000 ஆக விலை அதிகரித்துள்ள மதுரை மல்லிகைப் பூ.
பகிர்:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை சந்தைகளில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயா்ந்துள்ள நிலையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 3,000-க்கு விற்பனையாகிறது.

மதுரை மாட்டுத்தாவணி, மலர் சந்தையில் வெள்ளக்கிழமை வரை ரூ.1000-க்கு விற்பனையான பூக்கள் விலை சனிக்கிழமை ரூ.3000 வரை விலை அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | ஒரு கிலோ பூண்டு ரூ.400-க்கு விற்பனை

Advertisement

Advertisement

மல்லிகைப் பூ ஒரு கிலோ ரூ. 3000-க்கும், பிச்சிப்பூ மற்றும் முல்லை ஆகிய பூக்கள் கிலோ ரூ.2000-க்கும், மெட்ராஸ் மல்லி கிலோ ரூ.2000-க்கும், சம்மங்கி , செவ்வந்தி கிலோ ரூ.250-க்கும், செண்டுமல்லி கிலோ ரூ.100-க்கும், அரளி கிலோ ரூ.450-க்கும், பன்னீர் ரோஸ் கிலோ ரூ.300-க்கும், பட்டன் ரோஸ் கிலோ ரூ. 250-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளிக்கிழமை மல்லிகை கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை கிலோ ரூ.3,000 ஆக விலை அதிகரித்துள்ளது. இதேபோன்று முல்லை மற்றும் பிச்சி  பூ கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் சனிக்கிழமை கிலோ ரூ.2,000 ஆக விலை அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments