FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிறுவன் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை!

ஆவடி அருகே 7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை..

சிறை தண்டனை விதிக்கப்பட்ட சிறுவன்
பகிர்:

ஆவடி அருகே 7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் புதன்கிழமை திருவள்ளூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே முத்தாப்புதுப் பேட்டையைச் சேர்ந்தவர் 7 வயது சிறுவன். கடந்த 14.4.2023 அன்று அதே பகுதியைச் சேர்ந்த திருமால் மகன் பிரவீன்(19) சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்ததால், இதுதொடர்பாக பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் பிரவீன் மீது போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உள்படுத்தினர். மேலும், இந்த வழக்கு விசாரணையும் கடந்த 2 ஆண்டுகளாக திருவள்ளூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில் இறுதியாக போக்ஸோ நீதிபதி உமா மகேஸ்வரி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டதால் பிரவீனுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் இளைஞரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

summary

The Thiruvallur District POCSO Court on Wednesday sentenced a youth to 14 years in prison and a fine of Rs. 25,000 for sexually assaulting a 7-year-old boy near Avadi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments