வானிலை மையத்தின் செயற்கைக்கோள் படம் 
தமிழ்நாடு

வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! புயலாக மாறுமா?

வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய அந்தமான் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சி, இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு உருவாகியிருக்கும் இரண்டாவது புயல் சின்னம் இதுவாகும்.

இந்த வாரத் தொடக்கத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்தது.

இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உள்தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்துக்கு இடையே வலுவிழந்து கரையைக் கடந்தது.

இந்த நிலையில், மீண்டும் வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியிருப்பதால், அடுத்த 4 நாள்களுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.

A new low-pressure area has formed in the Bay of Bengal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

SCROLL FOR NEXT