முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் IANS
தமிழ்நாடு

அதிமுகவிலிருந்து நீக்கம்! நாளை பேசுகிறேன்: செங்கோட்டையன்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது குறித்து நாளை பேசுகிறேன் என செங்கோட்டையன் கூறினார்.

தினமணி செய்திச் சேவை

அதிமுகவின் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். தான், நீக்கப்பட்டதற்கான விளக்கத்தை கட்சி அலுவலகத்தில் நாளை பேசுகிறேன் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அதிமுகவிலிருந்து செங்கோட்டையனை நீக்கி, கட்சிப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டு, அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருந்து வந்தார். தற்போது அதிமுகவிலிருந்தே அவர் நீக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, செங்கோட்டையனிடம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்.க, நாளை காலை 11 மணிக்கு தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விரிவாகப் பேசுகிறேன் என்று பதிலளித்துள்ளார்.

முன்னதாக, கட்சியிலிருந்து நீக்கினால் என்ன செய்வீர்கள் என்று நேற்று செய்தியாளர்கள் செங்கோட்டையனிடம் கேட்டதற்கு, கட்சியிலிருந்து நீக்கினால் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பசும்பொன்னில் நேற்று, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனுடன் இணைந்து, முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய நிலையில், அதிமுகவிலிருந்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.

செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீக்கி, எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கட்சியில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏ செங்கோட்டையனை, இன்றுமுதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Sengottaiyan said he will speak tomorrow about his removal from the AIADMK.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“வீட்டுக்குள் இருந்தே அரசியல் செய்கிறோமா?”: தவெக அனந்தஜித் நேர்காணல்

ஹெச் 125 ஹெலிகாப்டர் உற்பத்தியை தொடக்கி வைத்த மோடி - மேக்ரான்!

கேமரூன் கிரீன் அல்ல, ஸ்கேமர் கிரீன்..! திருந்தாத தேர்வுக்குழு!

சூப்பர் 8 சுற்றுக்கு 7 அணிகள் தகுதி; கடைசி இடம் யாருக்கு?

பாதுகாப்பு, திறன் மேம்பாடு, செய்யறிவு.. இந்தியா - பிரான்ஸ் இடையே 20 ஒப்பந்தங்கள் கையொப்பம்!

SCROLL FOR NEXT