காஞ்சிபுரத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதல்வர் உதயநிதி.  
தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் ரூ. 254 கோடியில் நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்!

காஞ்சிபுரத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதல்வர் உதயநிதி.

இணையதளச் செய்திப் பிரிவு

காஞ்சிபுரத்தில் 4,997 பயனாளிகளுக்கு ரூ. 254 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

இதில் எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கைத்தறி துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 4,997 பயனாளிகளுக்கு ரூ. 254 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .

விழாவில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

Deputy Chief Minister Udhayanidhi Stalin distributed government welfare assistance worth Rs. 254 crore to 4,997 beneficiaries in Kanchipuram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் வாழ்த்து! செப். 12ல் பதவியேற்பு?

பற்றி எரியும் நேபாளம் - புகைப்படங்கள்

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் நன்றி!

வெள்ளை நிலா... தீப்தி சதி!

SCROLL FOR NEXT