புதுவையில் ராகுல் காந்தி - ஸ்டாலின் சந்திக்காதது ஏன்?
புதுவையில் ராகுல் காந்தி - ஸ்டாலின் சந்திக்காதது குறித்து அண்ணாமலை கேள்வி.
புதுவையில் ராகுல் காந்தி - ஸ்டாலின் சந்திக்காதது ஏன் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
”கோவை தெற்கில் செந்தில் பாலாஜிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை. கரூர் நபர்கள் எப்படி வேலை பார்க்கிறார்கள்? பையில் நிறைய பணத்துடன், அண்டா, குண்டாவுடன் சுற்றி வருகிறார்கள்.
Advertisement
அண்ணன் சீமான் கடுமையாக பிரசாரம் செய்து வருகிறார். நாளை மாலை முதல் நான் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளேன்.
புதுவையில் ராகுல் காந்தி, ஸ்டாலின் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. ஒரே நாள் பிரசாரம் மேற்கொண்டபோதும் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை.
இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை. கோவை விமான நிலையம் வந்த ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யாதது ஏன்?
விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி கொடுக்க வேண்டும். காவல் துறை கூடுதல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்” என்றார்.