முகப்பு
தமிழ்நாடு

சட்டப்பேரவைத் தேர்தல்! புதுவை மதுக்கடைகளில் அலைமோதிய மது பிரியர்கள்!

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை பற்றி..

Updated On : 21 ஏப்ரல், 2026 at 3:44 PM
சட்டப்பேரவைத் தேர்தல் - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 3:37 PM

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அடுத்த மூன்று நாள்களுக்கு மூடப்படும் என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படவிருக்கின்றன

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுச்சேரியில் 3 நாள்கள் மதுக்கடைகள் மூடப்பட்டதால் நேற்று இரவும், இன்று காலையும் மதுக்கடைகளில் கூட்டம் கூட்டமாகக் குவிந்து மதுபானங்களை வாங்கி சென்றார்கள் மது பிரியர்கள்.

Advertisement

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகத்தையொட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் இன்று முதல் 3 நாள்கள் மூட வேண்டும் என புதுச்சேரி கலால்துறை உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று காலை 10 மணி முதல் 23-ம் தேதி இரவு வரை மூடப்படுகின்றது.

இதையொட்டி நேற்று மாலையும், இன்று காலையும் புதுச்சேரியில் உள்ள மதுக்கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. பலரும் அதிக அளவிலான மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். மூன்று நாள்கள் மதுக்கடைகள் மூடப்பட்டதால் முன்னதாக மது பிரியர்கள் மதுபானக்கடைகளில் கூட்டம் கூட்டமாகக் குவிந்தது திருவிழா போல் காட்சியளித்தது.

summary

It has been announced that TASMAC outlets will remain closed for the next three days in view of the Tamil Nadu Legislative Assembly elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.