பூத் சிலிப் இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும்?
பூத் சிலிப்பை இணையத்தில் பதிவிறக்கம் செய்வது எப்படி?
வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) கிடைக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையத்தில் வலைதளத்தில் மிக எளிதாக பதிவிறக்கம் செய்ய முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் நாளை (ஏப். 23) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலைப் போன்று, தமிழ்நாட்டிலும் வரலாறு காணாத வாக்குப்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையம், அந்தந்த வாக்குச் சாவடி அலுவலர்கள் மூலம் வாக்காளர் தகவல் சீட்டை விநியோகித்து வருகிறது.
Advertisement
Advertisement
வெளியூர்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் வாக்காளர் தகவல் சீட்டுகளைப் பெறாதோர் வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்து கொள்வதற்கான வழிமுறைகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, https://electoralsearch.eci.gov.in இணைய முகவரியிலோ அல்லது வாக்காளர் உதவி எண் செயலி அல்லது 1950 என்ற கட்டணமில்லா எண்ணைப் பயன்படுத்தியோ தங்களது வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
வாக்குச் சாவடிக்குள் செல்போன் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், அடையாள அட்டையுடன் வாக்காளர் தகவல் சீட்டு கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டை விவரங்கள், பெயர் உள்ளிட்ட சுயவிவரங்கள் அல்லது செல்போன் எண்ணை பயன்படுத்தி வாக்காளர் தகவல் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
1. வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் மாநிலம் (கட்டாயமில்லை) ஆகியவற்றை உள்ளிட்டு வாக்காளர் தகவல் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
2. பெயர், உறவினர் பெயர், பாலினம், வயது / பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு வாக்காளர் தகவல் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
3. வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை உள்ளிட்டு, அந்த எண்ணுக்கு வரக் கூடிய ஓடிபியைப் பதிவிட்ட பிறகு வாக்காளர் தகவல் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
What should you do if you do not have a booth slip?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.