முடிவைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்! வாக்களித்த பின் சிவகார்த்திகேயன்!
ஜனநாயகக் கடமையாற்றினார் நடிகர் சிவகார்த்திகேயன்...
சென்னை வளசரவாக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவியுடன் சென்று வாக்களித்தார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் காலைமுதல் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயனும், அவரது மனைவி ஆர்த்தியும் இன்று காலை வாக்களித்தனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சிவகார்த்திகேயன் பேசியதாவது:
”இந்த தேர்தலில்தான் முதல்முறையாக சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகம் இருப்பதாக பார்க்கிறேன். தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.
"I am eager to know the results!" — Sivakarthikeyan, after casting his vote.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.