முகப்பு
தமிழ்நாடு

முடிவைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்! வாக்களித்த பின் சிவகார்த்திகேயன்!

ஜனநாயகக் கடமையாற்றினார் நடிகர் சிவகார்த்திகேயன்...

Updated On : 23 ஏப்ரல், 2026 at 10:37 AM
நடிகர் சிவகார்த்திகேயன் - X
பகிர்:

சென்னை வளசரவாக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவியுடன் சென்று வாக்களித்தார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் காலைமுதல் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயனும், அவரது மனைவி ஆர்த்தியும் இன்று காலை வாக்களித்தனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சிவகார்த்திகேயன் பேசியதாவது:

”இந்த தேர்தலில்தான் முதல்முறையாக சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகம் இருப்பதாக பார்க்கிறேன். தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.

summary

"I am eager to know the results!" — Sivakarthikeyan, after casting his vote.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.