முகப்பு
தமிழ்நாடு

நாமக்கல்: திருமணம் முடிந்து தம்பதியாக வந்து வாக்களித்த புதுமணப்பெண்!

நாமக்கல்லில் திருமணம் முடிந்தவுடன் தம்பதியாக வந்து வாக்களித்த புதுமணப்பெண்

Updated On : 23 ஏப்ரல், 2026 at 11:13 AM
புதுமணத் தம்பதிகள் - DPS
பகிர்:

நாமக்கல்: நாமக்கல்லில் திருமணம் முடிந்தவுடன் கணவருடன் வந்து வாக்களித்த புதுமணப்பெண்.

நாமக்கல் அடுத்த என்.கொசவம்பட்டி வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் தீபிகா. இவருக்கும், திருப்பூரைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் இன்று காலை நாமக்கல்லில் திருமணம் நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் புதுமண தம்பதியர் தாலி கட்டியவுடன் என்.கொசவம்பட்டி மாநகராட்சி துவக்க பள்ளிக்கு வந்தனர். மணப்பெண் தீபிகாவிற்கு இங்கு வாக்கு உள்ள நிலையில் அவர் தனது வாக்கை செலுத்திவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

Advertisement

இதுகுறித்து மணப்பெண் தீபிகா கூறுகையில் தனது திருமண நாளில் ஜனநாயக கடமையை ஆற்றியது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், திருமண நிகழ்வுகள் முடிவுற்று திருப்பூர் செல்ல இருப்பதால் காலையிலேயே வந்து வாக்களித்து உள்ளதாகத் தெரிவித்தார்.

summary

Newlyweds in Namakkal came to vote as a couple after their wedding

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.