யார் ஆட்சிக்கு வந்தாலும்... வாக்களித்த பிறகு சிவகுமாரின் ஒரே கோரிக்கை!
தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும் என நடிகர் சிவகுமார் கோரிக்கை...
தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மதுக்கடைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என நடிகர் சிவகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சிவகுமார் சென்னையில் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களுடன் சிவகுமார் பேசியதாவது:
Advertisement
Advertisement
''தமிழ்நாட்டில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் நான் முன்வைப்பது ஒரே கோரிக்கைதான். யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும். குடி மக்களை குடிகார மக்களாக ஆக்கியுள்ளது டாஸ்மாக்.
மதுபானத்தால் தமிழ்நாட்டில் பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 சதவிகிதத்திற்கும் மேலான குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன'' எனக் கோரிக்கை வைத்தார்.
TN Election 2026 actor Sivakumar's sole request after casting his vote
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.