வருமான வரித்துறை சோதனை! ஆதாரங்களை வெளியிட்டார் செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாக ஆதாரங்களை வெளியிட்டார்.
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாக ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை நடைபெற்றதாகவும், அவற்றை ஊடகங்களில் ஏன் அறிவிக்கவில்லை எனவும் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது, புகைப்படம் மற்றும் விடியோ ஆதாரங்களை வெளியிட்ட செல்வப்பெருந்தகை, "இந்தப் புகைப்படங்களில் இருப்பவர்களெல்லாம் யார்? எந்த அதிகாரிகள்? இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
Advertisement
அவர்கள் சோதனை செய்யவே இல்லை என உண்மையை மறைக்கிறார்களே. என் மீது புகாரும் கொடுக்கின்றனர்.
இப்போது இந்த புகைப்படங்களையும் வன்தட்டையும் (Hard Disk - ஹார்ட் டிஸ்க்) நான் ஒப்படைக்கிறேன்.
நீங்கள் சோதனை செய்வது தவறு கிடையாது. சோதனை மேற்கொண்டதை மக்களிடமோ பத்திரிகையாளர்களிடமோ தெரிவித்தீர்களா? ஏன் தெரிவிக்கவில்லை. இதில் என்ன ரகசியம் இருக்கிறது?
இந்த அதிகாரிகளெல்லாம் யார்? காவல்துறை ஏன் நிற்கின்றனர்?
அதிமுக, அமமுக, பாமகவினர் வீட்டிலெல்லாம் எவ்வளவு சோதனை செய்திருக்கிறீர்கள்? எவ்வளவு கைப்பற்றினீர்கள்? எத்தனை இடங்களில் சோதனை செய்தீர்கள் என வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.