கோடை விடுமுறையில் வால்பாறை போறீங்களா?
கோடை விடுமுறையில் வால்பாறை போகத் திட்டமிட்டுள்ளவர்கள் கவனிக்க..
குளுகுளுவென, பசுமையான வால்பாறையை மனதில் நினைத்துக்கொண்டு கோடை விடுமுறையில் வால்பாறை போக திட்டமிட்டுள்ளவர்கள், அங்கு கோடை வெப்பத்தால் வறட்சி நிலவுகிறது என்பதை அறிந்து கொண்டு திட்டமிடுவது நல்லது.
வால்பாறையில் கடுமையான வறட்சி நிலவுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் ஏழாவது சொர்க்கம் என்று அழைக்கப்படும் வால்பாறையில் மிகவும் பிரசித்தி பெற்ற கூழாங்கல் ஆறு, நல்ல முடி பூஞ்சோலை காட்சிமுனை, சோலையாறு அணை, பாலாஜி கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம்.
Advertisement
Advertisement
வெளிநாட்டினர், தமிழகம், கேரளம், புதுவை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் ஆறுகளில் நீர் வற்றி வறட்சியாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகளின் வரத்தும் குறைந்துள்ளது.
Those planning to go to Valparai for summer vacation should note...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.