முகப்பு
தமிழ்நாடு

அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்

அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராக துறைமுகம் தவெக வேட்பாளர் சினோரா அசோக்கின் புகார் குறித்து...

Updated On : 28 ஏப்ரல், 2026 at 6:41 PM
சேகர்பாபு | சினோரா அசோக் - கோப்புப் படம்
பகிர்:

அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தவெக வேட்பாளர் சினோரா அசோக் புகார் அளித்துள்ளார்.

சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சரும் வேட்பாளருமான சேகர்பாபுவால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தவெக சார்பில் போட்டியிடும் சினோரா அசோக், காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையவழியாக புகார் அளித்துள்ளார்.

வாக்குப் பதிவு நாளில் (ஏப். 23) சேகர்பாபுவுடன் வந்தவர்கள் தன்னைத் தாக்கியதாவும், வாக்கு எண்ணிக்கை நாளிலும் தன்னைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சேகர்பாபு மீதான புகாரில் சினோரா அசோக் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை துறைமுகத்தில் போட்டியிடும் சினோரா அசோக் மற்றும் சேகர்பாபு ஆகிய இருதரப்பினரிடையே பிரசாரத்தின்போதே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, வாக்குப் பதிவு நாளில் இரு தரப்பினரும் நேருக்குநேர் மோதிக் கொண்டனர். இரு தரப்பினருக்குமான மோதலை காவல்துறையினரும் துணை ராணுவப் படையினருமே விலக்கி வைத்தனர்.

இந்த நிலையில்தான், சேகர்பாபு மீது சினோரா அசோக் புகார் அளித்துள்ளார்.

summary

TVK candidate Sinora Ashok alleges life threat from DMK Minister Sekar Babu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.