FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மேக்கேதாட்டு விவகாரத்தில் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு: நிர்மல் குமார்

மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பேசியது பற்றி...

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:12 pm IST
அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்
பகிர்:

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு தீர்வில்லை என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் சட்டரீதியாக உச்ச நீதிமன்றத்தை நாடுவதுதான் நமக்காக எப்போதும் இருக்கும் ஒரே அணுகுமுறை. ஆனால், கர்நாடகத்தில் நமக்கு (தமிழ்நாடு) தண்ணீர் தரக் கூடாது என 100, 200 ஆண்டுகளாக ஒருமனதாக இருக்கின்றனர்.

1974-ல் திமுக ஆட்சியில் இருந்த 50 ஆண்டு வலுவான ஒப்பந்தத்தை நாம் தொலைத்து விட்டோம். நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு உச்ச நீதிமன்றம் மட்டும்தான். அதனைத் தவிர இருக்கும் வேறு வாய்ப்புகளை முதல்வர் ஆராய்ந்து, பின்னர் அறிவிப்பார்.

Advertisement

Advertisement

மேலும், மத்திய அரசுக்கும் அழுத்தங்கள் தரப்படும். இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சகத்துக்கே தெளிவில்லை. அவர்களே கர்நாடகத்துக்கு ஆதரவாகத்தான் பேசுகின்றனர். தமிழகத்துக்கு எதிராகவும் விரோதிபோலவும் பேசுகின்றனர்.

இதில் மாநில அரசுகள் எதுவும் செய்ய முடியாது; எதுவாயினும் மத்திய அரசுதான் செய்ய முடியும்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் இருந்தாலும், பாஜக இருந்தாலும் அவர்களின் ஒரே முடிவு, தமிழகத்துக்கு தண்ணீர் தரக் கூடாது என்பதுதான்" என்று தெரிவித்துள்ளார்.

summary

The Supreme Court is the only solution available to us regarding the Mekedatu dam issue, says Minister Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments